Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. போட்டியாளர்கள் இடையே மோதல்!

Published : Sep 08, 2026, 11:52 AM ISTUpdated : Sep 08, 2026, 11:54 AM IST

Bigg Boss promo: பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் Day 2 முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீசன்தொடங்கிய இரண்டு நாட்களிலேயே வீட்டிற்குள் போட்டியும், கருத்து மோதல்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

PREV
14
பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கிய இரண்டு நாட்களிலேயே வீட்டிற்குள் போட்டியும், கருத்து மோதல்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில், ஆரம்பத்திலேயே புதுப்புது விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய எபிசோடிற்கான புரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

24
‘ஜனநாயக ரூம்’தான் அடுத்த ட்விஸ்ட்டா?

இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று ‘Democracy Room’ எனப்படும் ஜனநாயக அறை. போட்டியாளர்களின் முடிவெடுக்கும் திறன், தலைமைத்துவம் மற்றும் குழுவாக செயல்படும் விதத்தை மாற்றக்கூடிய வகையில் இந்த புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிற்குள் இருக்கும் அதிகார சமநிலையில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இன்றைய புரோமோவில் போட்டியாளர்கள் புதிய கட்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. யார் யாருடன் இணைந்து செயல்படுகிறார்கள், யார் தனியாக விளையாடத் தொடங்குகிறார்கள் என்பதும் இனி முக்கியமாக மாறக்கூடும்.

34
முதல் கேப்டன் யார்?

சீசன் 10-ன் முதல் கேப்டனுக்கான போட்டியும் ஏற்கனவே தொடங்கிவிட்டது. முதல் கேப்டன்சி டாஸ்க்கில் ஷாதிகா மற்றும் வினோத் பாபு உள்ளிட்ட போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதினர். இறுதியில் ஷாதிகா முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனால் கேப்டனின் அதிகாரம், மற்ற போட்டியாளர்களின் ஆதரவு மற்றும் அடுத்தடுத்த டாஸ்க்குகளில் அவர்களின் நிலைப்பாடு என பல விஷயங்கள் முக்கியத்துவம் பெற உள்ளன.

44
மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கிய கையோடு வீட்டிற்குள் போட்டி களைகட்டத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், "எதன் அடிப்படையில் தினமும் இரண்டு பேரை எடுத்தீர்கள் என்று ஹவுஸ் மேட்ஸ் கேப்டன் ஷாதிகாவிடம்ன் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இது குறித்து விவாதம் தொடங்கியது. இதனால் ஷாதிகா உங்கள் பிரச்சனையை முடித்துக் கொண்டு என்னை அழையுங்கள் என்று சொல்லிவிட்டு கோபமாக செல்கிறார். அப்போது ஜேசன் கௌஷி தனது கருத்தை வெளிப்படையாக கூறி கேப்டனுடன் வாக்குவாததில் ஈடுபடுகிறார். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் விதமே பரபரப்பை ஏற்படுத்துகிறது.

பிக்பாஸ் ஆரம்பித்த 2 நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி வருவது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில், போட்டியாளர்களின் கூட்டணி எப்படி மாறும், கேப்டன் ஷாதிகாவின் முடிவுகள் வீட்டிற்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இன்றைய எபிசோடின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories