
ஆடுகளம் சீரியலில் இன்றைய எபிசோடில் தேவியிடம் சென்று அக்கா எனக்கு ஒரு காபி போட்டு தாயென்று சத்யா கேட்க நீ எப்படி இந்த வீட்டுக்கு மருமகளோ அதே மாதிரி தான் நானும் இந்த வீட்டுக்கு மருமகன் உனக்கு தேவை என்பதை நீயே செஞ்சுக்கோ என்று தன் தங்கையை கடுமையாக பேசுகிறார். சத்யா அதை கேட்டு மனம் உருகி போகிறார். நான் சந்தோஷமா இருக்கிறது யாருக்குமே புடிக்கல. உனக்கும் புடிக்கல என்று தேவி சொல்ல நீ சந்தோஷமா இருக்கிறதா என் கனவு, ஏன் அக்கா இப்படி எல்லாம் பேசுற என்று சத்யா கூறுகிறார்.
அதுக்காகத்தான் நான் இவ்வளவு பாடுபட்டேன் என்று சொல்கிறார் அப்போ திரும்பி பாடுபட்டு அதை நாசமாக்கிடாத என்கிறார் தேவி. உன்ன பார்த்தாலே எனக்கு கோபம் பொங்குது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அடுப்பில் இருக்கும் பால் பொங்கி விடுகிறது. அய்யய்யோ பால் பொங்கிருச்சு எல்லாம் வீணா ஆயிடுச்சு. என்று எடுத்து பாத்திரத்தை போடும்போது உன் முகத்தை பார்க்கும் போது எனக்கு எரிச்சலா வருது. கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா சில பேருடைய கண்ணு உருத்துது என்று சத்யாவை கடுமையாக பேசுகிறார் தேவி. நம்ம நிம்மதியா வாழ விட மாட்டாங்க ஒதுங்கிப் போக மாட்டாங்க என்று சத்யாவை மறைமுகமாக பேசுகிறார் தேவி. எப்ப தான் இந்த தொலை எல்லாம் தீருமோ நிம்மதியா காபி கூட போட விட மாட்டேங்கிறாங்க சீ... என்று சொல்லிவிட்டு போகிறார் தேவி. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சத்யா மனம் உடைந்து அழுது கொண்டே அர்ஜுனுக்கு காபி எடுத்து கொண்டு மாடிக்கு செல்கிறார்.
அர்ஜுனுக்கு காபி கொண்டு போகிறார் சத்யா. காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அருகில் சத்யாவும் அர்ஜுனும் எடுத்துக்கொண்ட போட்டோஇருக்கிறது.அதை கண்டு கடும் கோபம் கொண்ட அர்ஜுன் நான் எவ்வளவு தடவை இதை தூக்கி போட்டாலும் திரும்பி யார் இங்கவைக்கிறது. என்று கையில் போட்டோவை எடுத்துக்கொண்டு இன்னைக்கு காலையில இவன் மூஞ்சில தான் நான் முழிச்சேன். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என்று சொல்லிக் கொண்டே அந்த போட்டோவை தூக்கி எரிகிறார் அர்ஜுன். அப்பொழுது சத்யா கையில் காபியுடன் வர தூக்கி எறிந்த போட்டோ அவரது காலில் படுகிறது. மிகவும் வருத்தத்துடன் அந்த போட்டோவை எடுத்து பார்க்கிறார் அதனை பார்த்த அர்ஜுன் வேகம் வேகமாக எழுந்து குளிக்க செல்கிறார். வருத்தத்துடன் வருகிறார் சத்யா. அந்த கையில் காபியை வைத்துக் கொண்டே நின்று கொண்டிருக்கிறார்.
கையில் காபியை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் சத்தியா திடீரென்று அந்த காபியை வாங்குகிறார் சஞ்சய் யார் என்று பார்க்கும்போது சஞ்சய் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது இதுக்கெல்லாம் காரணம் நீ தானே என்று அவரிடம் சண்டை போட்டு அவரை ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் அதை பார்த்து விடுகிறார் அர்ஜுன். நான் உண்மைய சொல்லலனு அடிக்கிறா என்று அர்ஜுனிடம் சொல்கிறார். பிறகு கோவத்துடன் சஞ்சய் செல்கிறான்
சத்யா அடித்த கோபத்தில் சத்யா யார் என்றும் நளனுக்கு என்ன வேணும் என்றும் உண்மையை சொல்ல முற்படுகிறார் சஞ்சய். சத்யாவிடம் செல்வநாயகி கேட்கிறார் உனக்கும் நளனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்போது சத்யா அதிர்ச்சிஅடைகிறாள்.சஞ்சய் அடித்த கோபத்தில் உண்மையை சொல்லிவிட்டானா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த எபிசோடு முடிவடைகிறது.