சைபர் நிபுணர்கள் கூற்றுப்படி, நீங்கள் மொபைலை பயன்படுத்தாத இரவு நேரத்தில்தான் ஹேக்கர்ஸ் மிகவும் தீவிரமாகச் செயல்படுவார்கள். தரவு அல்லது வைஃபை இயங்கிக்கொண்டிருந்தால் மால்வேர் மூலமாக உங்கள் மொபைலில் புகைப்படங்கள், பாஸ்வேர்ட், வங்கியின் ஒருமுறை பயன்படுத்தும் ஓடிபி போன்றவற்றை எளிதாகத் திருடிவிட முடியும். குறிப்பாக, நீங்கள் இலவச அல்லது பொது வைஃபையைப் பயன்படுத்திவிட்டு உறங்கினால், இந்த ஆபத்து 10 மடங்கு அதிகம்.
மன உளைச்சல் மற்றும் காலையில் தலைவலி
இரவு முழுவதும் மின்காந்தக் கதிர்வீச்சு அருகில் இருப்பதால், மூளைக்குச் சரியான ஓய்வு கிடைக்காது. 'ஜர்னல் ஆஃப் என்விரான்மென்டல் ஹெல்த்' அறிக்கையின்படி, தலைக்கு அருகில் தொலைபேசியை வைத்து உறங்கினால், மறுநாள் காலையில் தலைவலி, கவனக்குறைவு மற்றும் எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
இரவில் செய்ய வேண்டிய சரியான வழிமுறைகள்
ஏர்பிளைன் மோட் + வைஃபை ஆஃப்: உறங்கும்போது தொலைபேசியை ஏர் பிளைன் மோட் வைப்பது சிறந்தது. அலாரம் சரியாக ஒலிக்கும்; அதே நேரத்தில் எவ்விதக் கதிர்வீச்சோ, அறிவிப்புகளோ வராது.
அருகில் வைக்க வேண்டாம், தள்ளி வையுங்கள்: மொபைலை தலையணைக்கு அடியிலோ அல்லது தலைக்கு அருகிலோ வைக்காமல், அறையில் உள்ள வேறொரு மேஜையில் வையுங்கள். குறைந்தபட்சம் 3 முதல் 4 அடி தூரம் இருக்கட்டும்.
செட்டிங்க்ஸ், பேக்ரவுண்ட் ஆப்ஸ் ரிப்ரெஷ் அமைப்பை முடக்கிவிடவும். இரவில் 100% சார்ஜ் ஆனதும், மின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்களைப் போலவே உங்கள் மொபைலுக்கும் இரவில் ஓய்வு அவசியம்.