பிஎஸ்என்எல் 4ஜி குறித்து குட் நியூஸ்! 1 லட்சம் 4G டவர்கள்! வெளியான முக்கிய அப்டேட்!

Published : May 27, 2025, 11:12 AM IST

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 93,450 4G டவர்களை நிறுவியுள்ளது. உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

PREV
14
BSNL Installed 93450 4G towers

நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சம் 4ஜி டவர்கள் அமைக்கும் இலக்கை நோக்கிச் செல்லும் பிஎஸ்என்எல், இதுவரை 93,450 டவர்களை நிறுவியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

24
93,450 4ஜி டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல்

இது தொடர்பாக இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 தொடக்க விழாவில் ஜோதிராதித்ய சிந்தியா “நாங்கள் 93,450 4ஜி டவர்களை நிறுவியுள்ளோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும், இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார். 

சி-டாட், பிஎஸ்என்எல், தேஜஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவை இணைந்து பிஎஸ்என்எல்லுக்கான 4ஜி டவர்களை நிறுவி வருகின்றன. 22 மாதங்களில் நாட்டின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை இந்தக் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

34
4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 5வது நாடு இந்தியா

உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அமைச்சர் அமைச்சர் குறிப்பிட்டார். சீனா (ஹூவாய், இசட்இடி), பின்லாந்து (நோக்கியா), சுவீடன் (எரிக்சன்), தென்கொரியா (சாம்சங்) ஆகியவை உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கிய மற்ற நான்கு நாடுகளாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமையிலான கூட்டமைப்பு, பிஎஸ்என்எல்லுக்கான 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் நிறுவி வருகிறது.

1 லட்சம் 4ஜி டவர்கள் நிறுவ பிஎஸ்என்எல் இலக்கு

ரூ.19,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், TCS மேற்பார்வையில், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் டெலிமேடிக்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் துணை நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகியவை பிஎஸ்என்எல்லின் 4ஜி விரிவாக்கத்தில் பங்கேற்றுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி டவர்களை பிஎஸ்என்எல்லுக்காக நிறுவுவதை இந்தக் கூட்டமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது.

44
ரூ.2,903 கோடி வழங்கிய மத்திய அரசு

18,685 இடங்களில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கை நிறுவுதல் மற்றும் பராமரிப்புக்காக, ரூ.2,903 கோடி மதிப்பிலான முன்பணம் கொள்முதல் ஆணையை (APO) பிஎஸ்என்எல் சமீபத்தில் TCS-க்கு வழங்கியது. 

2023-ல், TCS தலைமையிலான கூட்டமைப்பு, இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக பிஎஸ்என்எல்லிடமிருந்து ரூ.15,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முன்பணம் கொள்முதல் ஆணையைப் பெற்றிருந்தது. 

அந்த முக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்போதைய புதிய APO ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories