இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Samsung, தன் புதிய டேப்லெட் மாடலான Galaxy Tab A11+-ஐ இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. 11 இன்ச் பெரிய திரை, ஸ்லீக் மெட்டல் டிசைன் மற்றும் புத்திசாலித்தனமான AI திறன்களுடன் இது மலிவு விலையில் ஸ்மார்ட் டேப்லெட் அனுபவத்தைப் வழங்குவதே நோக்கமாக உள்ளது என்று சாம்சங் தெரிவித்தார். இந்த டேப்லெட்டில் Google ஜெமினி, சர்க்கிள் டு சர்ச், லைவ் டிரான்ஸ்லேஷன் போன்ற பல மேம்பட்ட AI கருவிகள் உள்ளன.
திரையில் உள்ள எந்த உருப்படியையும் வட்டமிடும்போது அதற்கான விவரங்கள், வரையறைகள், தொடர்புடைய தகவல்கள் உடனே காட்டப்படும். செய்திகள் அல்லது சமூக ஊடக பதிவுகளைப் படிக்கும் போது திரையில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும். கணிதப் பிரச்சனைகளை கைஎழுத்திலோ தட்டச்சிலோ உள்ளிடும் போது, படிப்படியான தீர்வுகள், அலகு மாற்றம், அறிவியல் கணக்கீடுகள் போன்றவற்றை வழங்குகிறது. 4nm MediaTek MT8775 செயலி கொண்டு இயக்கப்படுவதால் டேப்லெட் மல்டி-டாஸ்கிங்கிலும் சிறந்த பதிலளிக்கிறது.