கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet, உலக அளவில் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கைகளின் எதிரொலியாக, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள கூகுள்அலுவலகங்களில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது, செயல்பாடுகளையும் வளங்களையும் சீரமைக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக சந்தைப்படுத்தல் (Marketing), விற்பனை (Sales) மற்றும் விளம்பர (Advertising) பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.