எனவே தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநராக இருந்த நிலையில் தற்போது யாருமே ஆளுநராக இல்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க,வுக்காக உழைத்தவர்களுக்கு கவர்னர் பதவி வழங்க, அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றிக்கும் இது உதவும் என மேலிடத்தின் கணக்காக இருக்கிறது
அந்த வகையில், 'ஏற்கனவே இரு மாநில கவர்னராக இருந்த தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பா.ஜ.க, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக பா.ஜ.க, மேலிட வட்டாரங்களில் பேச்சு பலமாக அடிபட்டு வருகிறது.