மருத்துவமனையில் ஒரே “மாஸ்டர் புரோசீஜர்” பில் வைத்து, அதன் ஒவ்வொரு சிறு செயல்முறைக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுமார் $1,00,000 (ரூ.8.8 மில்லியன்) வரை கூடுதல் தொகை சேர்க்கப்பட்டது. மேலும், தவறான “இன்பேஷண்ட்” மற்றும் “எமர்ஜென்சி” கோடுகள், வெண்டிலேட்டர் கட்டண பிழைகள் போன்றவற்றையும் AI கண்டறிந்துள்ளது. இந்த ஆதாரங்களுடன் குடும்ப மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பில்லை குறைத்த மருத்துவமனை
அதில், அனைத்து பில்லிங் பிழைகள் மற்றும் மெடிகேர் விதி மீறல்களை AI கண்டுபிடித்ததை விவரித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. உடனே மருத்துவமனை தவறை ஒப்புக்கொண்டு, பில்லை ரூ.1.73 கோடியில் இருந்து ரூ.29 லட்சத்தைக் குறைத்தது. பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் குடும்பம் அந்தத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டது. மாதம் ரூ.1,800 (சுமார் $20) செலவில் வாங்கிய AI சாட்பாட் சேவை, அந்தக் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடியை மிச்சப்படுத்தி தந்தது. இச்சம்பவம் உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.