Vijay: முதல் நாளே இப்படியா.. 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. விஜய் பதவியேற்பு விழாவில் சர்ச்சை!

Published : May 10, 2026, 11:48 AM IST

Vijay CM Oath Ceremony Controversy: இதேபோல் தமிழக அரசு நிகழ்ச்சி ஒன்றில் வந்தே மாதரம் பாடப்பட்டதும் இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு அதிமுக, திமுக ஆட்சிகளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் வந்தே மாதம் பாடப்படவில்லை.

PREV
14
முதல்வராக பதவியேற்ற விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு என இடதுசாரி கட்சிகள், விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்ததால் தவெகவுக்கு பெரும்பான்மை கிட்டியது.

விஜய், 9 அமைச்சர்கள் பதவியேற்பு

இதனைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். சி.ஜோசப் விஜய் என்னும் நான் என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விஜய் பதவியேற்கும்போது தவெக தொண்டர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. விஜய்யுடன் தவெகவின் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் என 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்

24
விஜய் பதவியேற்பு விழாவில் சர்ச்சை

முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அதில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது விஜய் பதவியேற்பு விழா தொடங்கும் போதும், முடிவடையும் போதும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

34
3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

ஆனால் விஜய் பதவியேற்பின் முதல் நாளிலேயே முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு திமுகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழக அரசு நிகழ்ச்சி ஒன்றில் வந்தே மாதரம் பாடப்பட்டதும் இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு அதிமுக, திமுக ஆட்சிகளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் வந்தே மாதம் பாடப்படவில்லை.

44
முதன் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது

இப்போது தவெக ஆட்சியின் பதவியேற்பு விழாவிலேயே வந்தே மாதரம் திணிக்கப்பட்டது ஏன்? எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நமது இந்திய நாட்டில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது தவறு இல்லை. ஆனால் இத்தனை நாள் தமிழகத்தில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது மரபு அல்ல. ஆனால் இப்போது அந்த மரபு ஏன் உடைக்கப்படுகிறது? என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. இது ஆளுநர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா என்பதால் இப்படி நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இனி முதல்வர் விஜய் மட்டும் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது தொடருமா? மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories