பெரியார் குறித்தும் விஜய் பேசினார், "இங்கே தான் நம் கொள்கை தலைவர் தந்தை பெரியார் பிறந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதியை பேசினார். பெரியாரிடமிருந்து கொள்கைகளை எடுத்தோம்; அண்ணா, எம்ஜிஆரிடமிருந்து தேர்தல் அரசியல் நடைமுறையை கற்றுக்கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து" என்றார்.
மேலும், “அண்ணா எங்களுடையவர், எம்ஜிஆர் எங்களுடையவர். அவர்களை யார் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று கூற முடியாது. 2026 தேர்தலில் அவர்களை நினைவுகூர முடியாது என்று சொல்ல முடியாது” எனவும் விஜய் தெரிவித்தார். தன்னிடம் பயமில்லை என்றும், அரசியலில் நேர்மையாகப் பயணித்து வருவதாகவும் கூறினார்.
உரையின் முடிவில், “மக்களை நம்பியே அரசியலுக்கு வந்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். என்னை நீங்கள் கைவிட மாட்டீர்கள் தானே?” என்று விஜய் தொண்டர்களிடம் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி, தங்கள் ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தினர். பாஜகவை எதிர்க்க முடியாது. களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது 2026 தேர்தலில் எம்.ஜி.ஆர், அண்ணாவை சொந்தம் கொண்டாட முடியாதுனு சொல்ல முடியாது. என்று கூறி நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் மறைமுகமாக தாக்கி பேசினார் விஜய்.