மல்லை சத்யா வைகோ குடும்பத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்குச் சொத்து இருக்கிறது என்றும் ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வைகோ வாங்கினார் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை வைகோ கட்டியுள்ளார். அந்த அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக ரகசியமாகப் புதுமனை புகு விழா நடத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையால் வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும் வைகோவின் உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார் என்றும் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.