போலீசாரும் விடாமல் வெவ்வேறு வாகனங்களில் சேசிங் செய்தனர். சுமார் 30 இருசக்கர வாகனங்களில் போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து சன்னியாசிப்பட்டி பகுதியில் கண்டெய்னர் லாரி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, வாகனத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் கடப்பாரை, கற்கள் வீசி போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தற்காப்புபாக்காக சுட்டதில் இருவர் மீது குண்டு பாய்ந்தது. இதில், ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார். இரண்டு காவலர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.