இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் இருந்து பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேடுகள், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள், பார் உரிமை டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.