இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"வருகிற ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், நாளை மறுநாள், ஜூலை 19-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.