விவசாயிகளுக்கான திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் படி மக்களுக்கு அடிப்படை தேவையாக இருப்பது உண்ண உணவாகும், அந்த வகையில் பயிர்கள், செடிகள் மூலம் அரிசி, காய்கறிகளை உற்பத்தி செய்பவர்களான விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.651 கோடியில் சிறப்பு ஊக்கத் தொகை, விவசாயத்திற்கு ரூ.270 கோடி ரூபாயில் இயந்திரங்கள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.