இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா, திருமாவளவன், வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கருத்து
இது தொடர்பாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள #USTariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும்#DollarCity திருப்பூர் தவிக்கிறது.