School Education Department: தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 23ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
24
பள்ளிக்கல்வித்துறை
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் ஜனவரி 4ம் தேதி ஞாயிற்று கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் . அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
34
சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல் , ஆறு , ஏரி , குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை , நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். அனைத்து பள்ளி தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.