சட்டமன்றம், உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே காரணம். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என ஓபிஎஸ், சசிகலா, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிற நிலையில் இயக்கத்தின் எதிர்காலம், கட்சி மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவரும் விட்டுக்கொடுத்து இயக்கத்தை ஒன்றுபடுத்துகிற முயற்சியில் இறங்க வேண்டும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.