இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், ஜனநாயகன் படத்தை முடக்கும் அளவுக்கு பிரதமர் மோடி செயல்பட மாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அப்போது ஜனநாயகன் மூலம் மத்திய அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பிரதமர் மோடி மாபெரும் மனிதர்
இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, ''ஒரு படத்தை தடை விதிப்பதன் மூலம் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து விட முடியுமா? விஜய் மட்டுமல்ல; யாருக்கும் அழுத்தும் கொடுத்து அவரை வற்புறுத்தி கூட்டணிக்குள் இழுக்க முடியாது. பிரதமர் மோடி மாபெரும் மனிதர். மோடி இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.