Police vehicle inspection in Chennai : டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானத்தில் திமுக அரசு 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். மேலும் அமைச்சராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நேற்று சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
பாஜக தலைவர்கள் கைது
இதனையறிந்த போலீசார் சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரையும் முன்கூட்டியே கைது செய்யபட்டனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.
தொடை நடுங்கி திமுக அரசு.! உங்களால் என்ன செய்ய முடியும்- சவால் விடும் அண்ணாமலை
அண்ணாமலை சவால்
மேலும் இனி வரும் காலங்களில் போலீசாருக்கு தொடர்ந்து வேலை வைப்போம் எனவும். திடீரென முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தலைமைசெயலகத்தை சுற்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகம் சுற்றியுள்ள அனைத்து சாலைகளில் செல்லும் பேருந்துகளில் போலீசார் சோதனை செய்த பிறகு தலைமைச் செயலகம் வழியாக பேருந்துகள் அனுமதிக்கப்படுகிறது
போலீசார் வாகன சோதனை
தலைமை செயலகம் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் செல்லும் அரசு பேருந்துகள் அனைத்திலும் காவல்துறையினர் போராட்டம் நடத்த பாஜக வருகின்றனரா? என்று பேருந்தில் ஏறி சோதனை செய்கின்றனர், அதன் பிறகு பேருந்துகள் அனுப்பி வைக்கபடுகுறது. தலைமை செயலகம் அருகில் உள்ள ரிசர்வ் வங்கி எதிரே பேருந்துகளை காவல்துறையினர் சோதனை நடத்தியதால், தலைமை செயலகம் செல்லும் அரசு ஊழியர்கள், பொது மக்கள் குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் தவித்தனர்.
பாஜக பொது மேடையில் பெண்களின் இடுப்பு கிள்ளப்பட்டது.! விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய காயத்ரி ரகுராம்