தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடு திருச்செந்தூர். இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை நாட்கள் என்றால் சாமி தரிசனம் செய்யவே சுமார் 3 மணிநேரம் ஆகிவிடும்.