தமிழகத்தில் காலை நேரத்தில் பனி மூட்டம்.! நீலகிரியில் உறையவைக்கும் உறை பனி- வானிலை மையம் எச்சரிக்கை

First Published Jan 18, 2024, 2:12 PM IST

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதிகாலை வேளையில் பனி மூட்டம் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம்

மழை மற்றும் பனி மூட்டம் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் நாளை ( 18.01.2024 மற்றும் 19.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

Image: Getty

வறண்ட வானிலை நீடிக்கும்

20.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 21.01.2024 முதல்  24.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

Latest Videos


rajasthan fog

உறைபனி எச்சரிக்கை:

18.01.2024 மற்றும் 19.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
 

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

Anbumani : கண்ணைக் கட்டிக் கொண்டு உறியடித்து விளையாடிய அன்புமணி.. வைரலாகும் வீடியோ

click me!