திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, தலைநகர் டெல்லியில் இன்று (ஜனவரி 28) காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்தார். சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவும், காங்கிரஸும் கூட்டணியை தொடரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.