ஜனநாயகன் பட விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வழங்கும் தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்காதது தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வழங்க உள்ளது. ஜனநாயகன் வழக்கில் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
24
ஜனநாயகன் வழக்கு
ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. சென்சார்ட் சர்டிபிகேட் வழங்க உத்தரவிடக்கோரி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்து தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவரை ரத்து செய்து வழக்கை ஒத்திவைத்தது.
34
இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தது
இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜனநாயகன் பட விவகாரத்தில் ஜனவரி 29ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறுக்கப்பட்டது. சென்சார் போர்டிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டியது. படத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பாக ஜனவரி 5ம் தேதியே படக்குழுவுக்கு தெரிவித்து விட்டோம். படத்தை உடனே வெளியிட வேண்டும் என கூற முடியாது. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தணிக்கை வாரியமும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தது.
இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஜனநாயகன் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் தான் ஜனநாயகன் வழக்கில் ஜனவரி 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறப்போகிறது? என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விஜய் படத்துக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? இல்லை சென்சார் போர்டுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.