இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா வெளியிட்ட அறிவிப்பில்;- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் 66வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெறவும், சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி வருகின்ற 11.09.2023 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை வட்டங்கள், ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், இதரக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.