தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடிக்கும் அதிகம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் 2,93,04,905 பெண் வாக்காளர்கள், 2,80,30,658 ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். மேலும், 14,59,039 முதல் முறை வாக்காளர்களும், 68,501 ராணுவ வீரர்களும் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே 4,18,541 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக ஆகிய கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளும் மோதுகின்றன.