மிக கன மழை எச்சரிக்கை
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குளிர்ந்த இரவு நாளாக இருக்கப்போவதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை கடற்கரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மிக கனமழை சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விருதுநகர், தேனி பகுதிகளிலும் கொஞ்சம் மழை பெய்யும் என கூறியுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 26 முதல் பரவலாக மழை பெய்யும் என கூறியுள்ளார்.