அடுத்த 3 மணி நேரம் உஷார்! தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஏடாகூடமாக மழை வெளுத்து வாங்கப்போகுதாம்

Published : Nov 13, 2025, 10:02 AM ISTUpdated : Nov 13, 2025, 10:17 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

PREV
15
நவம்பர் மாதம் தொடங்கியதில் முதல் வெயில்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியதில் இருந்து கனமழை பெய்தது. பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதில் காலை நேரத்தில் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றை நாள் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

35
சென்னையில் வானிலை நிலவரம்

அதேபோல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
கனமழை எச்சரிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது (காலை 10 மணிவரை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

55
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இதனிடையே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். தென் கடலோர மாவட்டங்களான இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இன்று பகல் முழுதும் விட்டு விட்டு மழை தொடரும். வரக்கூடிய மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories