சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குநர் காமகோடி இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தபோது ஒரு சன்னியாசி கூறியதாக கோமியத்தைக் குடித்ததால், 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியானதாக தெரிவித்தார். கோமியம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு கொண்டது. வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு கோமியம் மருந்தாகப் பயன்படுகிறது என கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு கடும் விமர்சினத்திற்கு உள்ளானது. இந்த கருத்துக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.