திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கைப்பற்றப்பட்டது இத்தனை கோடியா?

Published : Jan 21, 2025, 02:33 PM ISTUpdated : Jan 21, 2025, 03:04 PM IST

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

PREV
15
திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கைப்பற்றப்பட்டது இத்தனை கோடியா?
DMK MP Kathir Anand

திமுக பொதுச்செயலாளரும், நீர்​வளத்​துறை அமைச்சருமான துரை​முருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்​பினருமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்​களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜனவரி 3ம் திடீர் சோதனை​யில் ஈடுபட்​டனர். மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

25
Kingston Engineering College

கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் ஜனவரி 4-ம் தேதி நள்ளிரவு வரை 44 மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் முக்கிய ஆவணங்கள் கம்ப்​யூட்டர் ஹார்​டுடிஸ்க் உள்ளிட்​ட​வற்றை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அந்த கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். 

35
Enforcement Directorate

இந்நிலையில், திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறை எவ்வளவு பணத்தை  கைப்பற்றியுள்ளது என தெரியவந்துள்ளது. அதாவது கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடியும், வீட்டு லாக்கரில் ரூ.75 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

45
Kathir Anand

மேலும் கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க், வீட்டிலிருந்து சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கதிர் ஆனந்தின் சொத்துக்கள் குறித்த விவரங்களை திரட்டி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

55
Chennai High Court

முன்னதாக கிங்ஸ்டன் கல்லூரியில் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என கூறி கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories