மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்

Published : Mar 23, 2026, 12:20 PM IST

TASMAC: தமிழகத்தில் 4800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

PREV
15
தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதோ அந்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமான வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் கட்சி தலைவர்களை விட எந்த அவசர தேவைக்கும் பணம் கொண்டு போக முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

25
தேர்தல் ஆணையம்

இந்நிலையில் வாக்காளர்களுக்கு மது விநியோகிப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 4,800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை மற்றும் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தேர்தல் ஆணையம் எளிதாக கண்காணிக்க முடியும்.

35
டாஸ்மாக் கடைகள்

ஏதேனும் ஒரு டாஸ்மாக்கில் திடீரென 30 சதவீதத்திற்கு அதிகமாக விற்பனை அதிகரித்தால் அந்த கடையில் தீவிரமான சோதனைகள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக மதுவை வாங்கி பதுக்குவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 50 சதவீதத்திற்கு அதிகமாக மதுபானங்களை இருப்பில் வைக்க கூடாது தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

45
பதுக்கி வைத்தால் நடவடிக்கை

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போதும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாட்களிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் மதுபானம் விநியோகிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். சட்டப்படி இது குற்றம் என்றாலும், மறைமுகமாக இது போன்ற நடவடிக்கைகள் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்த முறையை ஒழிப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமான கண்காணிப்பில் இறங்கியுள்ளது.

55
டிஜிட்டல் பில்லிங் முறை

டிஜிட்டல் பில்லிங் முறை அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கடைகளிலும் தினசரி எவ்வளவு மதுபானங்கள் விற்கப்படுகின்றன, இருப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை உடனடியாக அதிகாரிகளால் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories