மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் வங்கிகளின் மூலம் கடன் உதவி திட்டம், சொந்தமாக தொழில் தொடங்க மானிய உதவி திட்டங்கள், சுழல்நிதி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மகளிர் சுயு உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் வகையில் இயற்கை சந்தை நிகழ்ச்சியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.