'வருங்கால முதல்வர் விஜய்யின் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பது சரியானது அல்ல' என்று தவெக மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்
இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ''ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் அது மிகவும் தவறு. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
அந்த படத்துக்கு ஏன் தணிக்கை சான்றிதழ் கொடுக்கவில்லை என்ற விவரம் எனக்கு தெரியவில்லை. அப்படி தணிக்கை சான்றிதழ் கொடுக்காததில் உள்நோக்கம் இருந்தால் அது தவறு'' என்று தெரிவித்துள்ளார்.