அரசுப் பேருந்துகளில் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்துகளில் பயணம் செய்யும் சில பயணிகள் தங்களது கைப்பேசியில் உரத்த ஒலியில் பாடல்களைக் கேட்பது, திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தள வீடியோக்களை ஸ்பீக்கர் ஒலியில் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், சில நேரங்களில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் கூட தங்களின் கைப்பேசிகளையும், டேப்ரிக்கார்டர்களையும் அதிக சத்தத்தில் ஒலிக்க விடுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் வந்தன.
இதன் காரணமாக, பேருந்துகளில் பயணம் செய்யும் முதியவர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் இதர பயணிகள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வந்தனர். இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கும், அதிகாரிகளுக்கும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாகப் புகார்கள் சென்றடைந்தன.
இதையடுத்து, பயணிகளின் அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ் உத்தரவின்பேரில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?