தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்பட எந்தவொரு விவரத்தையும் வரும் 21 முதல் 23ம் தேதி வரை அதாவது 48 மணி நேரத்திற்கு காட்சிப்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அட்டவணையையும், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதி வௌியிட்டது.