ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்! முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன்! உச்சக்கட்ட பதற்றத்தில் சென்னை!

Published : Nov 11, 2025, 11:03 AM IST

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த ஜாமீன், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு.

PREV
14
ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

24
14 பேர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

சிறையில் இருந்த படியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 14 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடையீடடு மனு தாக்கல் செய்திருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

34
அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமீன்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நிபந்தனைகள் ஏற்க தயாராக இருப்பதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோகுல் மற்றும் ஹரிஹரன் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேர் ஜாமீனில் வெளியியே வந்ததை வந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

44
தமிழக அரசு மேல்முறையீடு

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories