Published : Feb 03, 2026, 12:05 PM ISTUpdated : Feb 03, 2026, 01:22 PM IST
தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளிலும் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த சில தினங்களாக எனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை கவனித்துக் கொள்வதற்காக நான் கோவையில் தங்கியுள்ளேன். தந்தையின் உடல்நிலையை கவனித்துக் கொள்வது எனது முதல் கடமையாக உள்ளது.
23
தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை..
இதன் காரணமாக நான் தேர்தலில் போட்டியிடுவேனா, இல்லையா என்று கூட தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடுவதை காலமும், நேரமும் தான் முடிவு செய்யும். மேலும் நான் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன். அந்த பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
33
விஜய்யிடம் இன்ஜினே இல்லை..
விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை அதிகம் விமர்சிக்க வேண்டாமென நினைக்கிறேன். விஜய் எங்கள டபுள் இன்ஜின் சர்கார் என்கிறார். எங்களிட் 2 இன்ஜின்கள் உள்ளன. ஆனால் விஜய்யிட் இன்ஜினே இல்லை. அவரிடம் பெட்ரோல், டீசல் என எதுவுமே இல்லை. தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் சத்தத்திற்காக மட்டுமே அவர் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.