தமிழகத்தில் 39ஆயிரம் கோடி ஊழல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனவே எந்த நேரமும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ரெய்டு தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.