தமிழக அரசியல் வரலாற்றில் 2001 சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததும், அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதும் இந்தியத் தேர்தல் ஆணைய வரலாற்றில் இன்றும் ஒரு முக்கியப் பாடமாக உள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் 2001 சட்டமன்றத் தேர்தல் என்பது ஒரு திருப்புமுனை மட்டுமல்ல, சட்டப்போராட்டங்களும், அதிரடிகளும் நிறைந்த ஒரு மறக்க முடியாத அத்தியாயம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததும், அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதும் இந்தியத் தேர்தல் ஆணைய வரலாற்றில் இன்றும் ஒரு முக்கியப் பாடமாக உள்ளது.
25
நான்கு தொகுதிகளில் வேட்புமனு: ஏன்?
பொதுவாக ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது விதி. ஆனால், 2001-ல் ஜெயலலிதா அவர்கள் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து அனைவரையும் அதிரவைத்தார்.
இதற்குப் பின்னணியில் ஒரு பலமான அரசியல் மற்றும் சட்ட வியூகம் இருந்தது. அப்போது அவர் மீது 'டான்சி' நில ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ஒரு தொகுதியில் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், மற்றொன்றில் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும், தொண்டர்களுக்குத் தன் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் இந்த முடிவை எடுத்தார்.
35
தேர்தல் அதிகாரிகளின் அதிரடி முடிவு
வேட்புமனு பரிசீலனையின் போது பரபரப்பான தமிழகம்
முதலில், கிருஷ்ணகிரி மற்றும் புவனகிரி தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதைச் சுட்டிக்காட்டி அவரது மனுக்களை நிராகரித்தனர்.
இதற்கிடையே, அவர் ஏற்கனவே இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல் செய்த விபரத்தை மறைத்து, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டையிலும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இறுதியில், "ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்யக்கூடாது" என்ற விதியைக் காட்டி, நான்கு தொகுதிகளிலுமே அவரது மனுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
தன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக மாற்றினார். "திமுக அரசு சதி செய்து என்னைத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்துவிட்டது" என்று மக்களிடம் முறையிட்டார்.
"நான் வேட்பாளராக வரக்கூடாது என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் உங்கள் முதலமைச்சராக வருவேன்" என்று அவர் முழங்கியது அமிதோசமான வரவேற்பைப் பெற்றது. வேட்பாளராக இல்லாமலேயே தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தேடித்தந்தார்.
55
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
தேர்தல் முடிவில் அதிமுக தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. தான் போட்டியிட முடியாவிட்டாலும், முதலமைச்சராகப் பதவியேற்றார். பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி விலகி, மேல்முறையீட்டில் விடுதலையான பிறகு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சரானார்.
இந்தச் சம்பவம் இந்தியத் தேர்தல் சட்டங்களில் பல விவாதங்களை உருவாக்கியது. குறிப்பாக, ஒருவர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் தகுதி நீக்கம் குறித்த சட்டங்கள் மேலும் வலுப்பெற இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.