இந்த கோர விபத்தில் பேருந்தின் முன் பகுதி நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த 40 பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பேருந்து விபத்து தொடர்பாக போலீசாருக்கும் மற்றும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.