குஜராத் மாநிலம் அகதாபாத்தில் இருந்து ஜூன் 12-ம் தேதி பிரிட்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடு பாதையில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளிலேயே விமானம் கீழே விழுந்ததில், விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 240 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.