இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி ராஜதுரை திவ்யாவின் வீட்டுக்கு வந்து அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் பெற்ற தாய் மற்றும் கள்ளக்காதலன் ராஜதுரை அடித்து உதைத்து சித்தரவதை செய்து வந்துள்ளனர்.
பள்ளிக்கு வந்திருந்த தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறியுள்ளனர். குறிப்பாக அம்மாவும், வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக கூறியுள்ளனர். ஆகையால் தன்னை வீட்டு அழைத்து செல்லுமாறு சிறுவன் தந்தையிடம் கதறினார். அப்போது புது வீடு கட்டி முடிந்ததும் தங்களை அழைத்து செல்வதாக ஆறுதல் கூறினார்.