CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!

Published : Aug 27, 2026, 04:56 PM IST

4 minister travel to delhi : நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.

PREV
14
நேபாள பெரு வெள்ளம்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோ கோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏராமானோர் மாயமானதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே அதிக்குள்ளாகியுள்ளது.

இதில் கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் இரண்டு குழுக்களாக நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் வெள்ளப்பெருக்கால் சிக்கியுள்ளதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கிடைத்தன.

24
மீட்பு நடவடிக்கை

இதையடுத்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே அவசர தொடர்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அவசர தொலைபேசி எண்களை அறிவித்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.

34
அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு உட்பட அயலக்கத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்!

இந்த கூட்டத்தில், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.

44
நேபாளம் செல்லும் மீட்பு குழுவினர்

அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுடன், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், ஐஏஎஸ் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories