சென்னை மக்களை அலறவிட்ட இடி.. வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல்..!

Published : Aug 18, 2023, 07:58 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. திடீரென பெய்த மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

PREV
14
சென்னை மக்களை அலறவிட்ட இடி.. வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல்..!
Chennai rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் தலைக்காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். வீட்டிலேயே இருந்தாலும் புழுக்கத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வளிமண்டல மேலக்கு சூழற்சி காரணமாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 

24

இந்நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை கூறியிருந்தது. 

34

அதன்படி நேற்று மாலை லேசான மழை தொடங்கிய மழை இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், கோபாலபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 

44

அதேபோல் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories