சென்னை பெரும்பாக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இளம்பெண் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.