Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. எங்கெல்லாம் தெரியுமா?

First Published May 3, 2023, 8:11 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

பூந்தமல்லி:

பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்னீர்குப்பம், கரையான்சாவடி முழுவதும், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி முழுவதும், மலையம்பாக்கம், சக்தி நகர், பாரி கார்டன், அன்பு நகர், கே.கே.நகர், ரஹ்மத் நகர்.

போரூர்:

மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகரின் ஒரு பகுதி, வசந்தபுரி, ஜீவா நகர், காமராஜ் நகர் கோவூர் ஏரிக்கரை, திருமலை நகர், புத்தவேடு, திருமுடிவக்கம் 1,5,6, மற்றும் 14வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, ராயல் கேஸ்ட்டல் அப்பார்ட்மெண்ட், எ.ஆர்.ரகுமான் அவென்யூ, மாங்காடு பட்டூர் பஜார் தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், எஸ்ஆர்எம்சி பரணிபுத்தூர் கிராமம் ஒரு பகுதி, தெள்ளியரகரம், தனலட்சுமி நகர், முத்தமிழ் நகர், ரம்யா நகர், கங்கையம்மன் கோயில் தெரு, செம்மபரம்பாக்கம் நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

அம்பத்தூர்:

கிழக்கு முகப்பேர் கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, அமிர்த பிளாட்ஸ், மெடிமிக்ஸ் அவென்யூ மற்றும் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!