சென்னை அருகே கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இவரது மகள் லியோரா ஸ்ரீ(10). வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் மகளை பள்ளியில் விட அழைத்து சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் சீரான நேரத்தில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீர்த்தியும், அவரது குழந்தையும் கீழே விழுந்துள்ளனர்.