சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43 நகர்வுகளிலேயே கார்ல்சனை சரணடையச் செய்தார். நான்காவது வரிசையில், இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மூன்று மத்திய சிப்பாய்களை அடுத்தடுத்து வரிசையாக வைத்திருந்தார்.
18வது நகர்வில், கார்ல்சன் தனது ராணியை தியாகம் செய்து, பிரக்ஞானந்தாவிடமிருந்து ஒரு பிஷப் மற்றும் குதிரையை வீழ்த்தினார். இருப்பினும், இந்த வாய்ப்பை பிரக்ஞானந்தா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், கார்ல்சன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். அவர் விரைவில் பிரக்ஞானந்தாவின் இரண்டாவது பிஷப்பையும் எடுத்துக்கொண்டார்.