விராட் கோலி காயம் எப்படி இருக்கிறது? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? முக்கிய அப்டேட்!
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் விராட் கோலி காயம் அடைந்த நிலையில், அவரது காயம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் விராட் கோலி காயம் அடைந்த நிலையில், அவரது காயம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
How is Virat Kohli's injury: ஐபிஎல்லில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 8 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்தது. லியோம் லிவிங்ஸ்டன் 40 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
பின்பு சவாலான இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 39 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணியும், குஜராத் அணியும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்துள்ளன. இந்த போட்டியின்போது ஆர்சிபி ஸ்டார் வீரர் விராட் கோலி பீல்டிங் செய்தபோது கையில் காயம் அடைந்தார்.
அதாவது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 12வது ஓவரில் விராட் கோலி பவுண்டரியை நிறுத்த முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. எல்லா நேரங்களிலும் களத்தில் தனது 100% திறமையை வெளிப்படுத்தும் விராட் கோலி, டீப் மிட்விக்கெட்டில் டைவ் செய்தார். ஆனால் பந்து அவரது கைகள் வழியாக பவுண்டரிக்கு சென்றது. ஆனால் பந்து தாக்கியதில் விராட் கோலி விரலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.
சொந்த மண்ணில் ஆப்பு வச்சுக் கிட்ட ஆர்சிபி – பின்னி பெடலெடுத்த ஜிடிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி!
இதனையடுத்து ஆர்சிபி அணியின் பிசியோ உடனடியாக வந்து வலி நிவாரண சிகிச்சை செய்தனர். விராட் கோலியின் காயம் பெரிதாக உள்ளதாவும், அவர் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனவும் தகவல் பரவின. இந்நிலையில், கோலியின் காயம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் முக்கிய அப்டேட் ஒன்று கூறியுள்ளார். போட்டிக்குப் பிறகு, கோலியின் காயம் மோசமாக உள்ளதா என்று ஆண்டி ஃப்ளவரிடம் கேட்கப்பட்டது. அவர் அந்தக் கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முன்னாள் கேப்டன் முற்றிலும் நலமாக இருப்பதாகக் கூறினார்.
அதாவது, ''விராட் கோலி நலனுடன் இருக்கிறார். எல்லாம் சரியாகி விட்டது'' என்று ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி சரியாக அமையவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ரன்கள் அடிக்க சிரமப்பட்ட கோலி, நேற்றைய போட்டியில் வெறும் 6 ரன்னில் அவுட் ஆனார். கோலியின் மோசமான பார்ம் தொடர்வதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
குஜாரத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் ஆர்சிபியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது. முக்கிய வீரர்கள் பில் சால்ட், ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், குர்னால் பாண்ட்யா ஆகியோர் ஒட்டுமொத்தமாக சொதப்பினர்கள். இதனால் வலுவான ஸ்கோரை ஆர்சிபியால் எட்ட முடியாததால் அந்த அணி தோல்வியடைய பெரும் காரணமாகி விட்டது.
இந்த தோல்விக்கு பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், ''190 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் பவர்பிளேயில் முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. 3 விக்கெட் இழந்தபிறகு ஜிதேஷ் சர்மா, லியோம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் சிறப்பாக விளையாடினார்கள். இந்த பிட்ச் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய விதம் அற்புதமாக இருந்தது. அவர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தினர்'' என்று தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச போட்டிக்கான அட்டவணை வெளியீடு; முதல் முறையாக கவுகாத்தியில் டெஸ்ட்