இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், முகமது ரிஸ்வான் பந்துக்கு நிகரான ரன் அடித்து நாட் அவுட்டில் செல்வதன்மூலம் அணிக்கு என்ன பயன்..? அவர் அடித்து ஆடமுயன்று ஆட்டமிழந்தால் கூட, பின்னால் ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது, நவாஸ், ஷதாப்கான் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். டி20 ஃபார்மட்டில் பந்துக்கு நிகராக ரன் அடித்து நாட் அவுட்டாக செல்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.